நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் வருகைக்காக.
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் சந்திப்பிற்காக.
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் உரையாடலுக்காக.
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் அன்பிற்காக .
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் உண்மைகளுக்காக.
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் துயரங்களுக்காக.
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழ்த்திய
உன் நாடகங்களுக்காக.
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Friday, June 12, 2020
Wednesday, June 10, 2020
அன்னா
தலைவர்கள் சிலர்
கொரோனா காலத்தில்
உயிரிழக்கிறார்கள்.
சிலர் தங்களது
பிறந்தநாட்களில்
இறந்துவிடுகிறார்கள்.
பிறந்த நாட்களில்
இனிப்பு வழங்கி
கொண்டாடுபவர்கள்
இறந்த நாட்களில்
படையலிட்டு
நினைவேந்துகிறார்கள்.
பிறந்த நாளில்
இறந்தவர்களுக்காக
செய்யப்படும்
நினைவேந்தல்களில் யாரும்
இனிப்பு வழங்குவதில்லை.
நள்ளிரவில்
பிறந்தவர்களுக்கு
இரண்டு பிறந்த நாட்கள்
இருக்கிறது.
நள்ளிரவில்
இறந்தவர்களுக்கு
இரண்டு இறந்த நாட்கள்
இருக்கிறது.
பெரும்பாலும்
பள்ளிக்கூடங்களில்
பிறந்த நாட்கள்
புதிதாக பிறந்துவிடுகின்றது.
காதல்
புதிதுபுதிதாக
பிறந்த நாட்களையும்
இறந்த நாட்களையும்
உருவாக்குகிறது.
பிறந்த நாளொன்றில்
கேக் வெட்டுவதுபோல்
இறந்த நாளில்
கேக் வெட்டுவது
சாத்தியமில்லை,
தலைவர்களுக்கு
கொரோனா காலத்தில்
உயிரிழக்கிறார்கள்.
சிலர் தங்களது
பிறந்தநாட்களில்
இறந்துவிடுகிறார்கள்.
பிறந்த நாட்களில்
இனிப்பு வழங்கி
கொண்டாடுபவர்கள்
இறந்த நாட்களில்
படையலிட்டு
நினைவேந்துகிறார்கள்.
பிறந்த நாளில்
இறந்தவர்களுக்காக
செய்யப்படும்
நினைவேந்தல்களில் யாரும்
இனிப்பு வழங்குவதில்லை.
நள்ளிரவில்
பிறந்தவர்களுக்கு
இரண்டு பிறந்த நாட்கள்
இருக்கிறது.
நள்ளிரவில்
இறந்தவர்களுக்கு
இரண்டு இறந்த நாட்கள்
இருக்கிறது.
பெரும்பாலும்
பள்ளிக்கூடங்களில்
பிறந்த நாட்கள்
புதிதாக பிறந்துவிடுகின்றது.
காதல்
புதிதுபுதிதாக
பிறந்த நாட்களையும்
இறந்த நாட்களையும்
உருவாக்குகிறது.
பிறந்த நாளொன்றில்
கேக் வெட்டுவதுபோல்
இறந்த நாளில்
கேக் வெட்டுவது
சாத்தியமில்லை,
தலைவர்களுக்கு
பிறந்த நாளும் இறந்த நாளும்
ஒன்றாகவே இருக்கிறது
மக்களோடு நிற்கும்வரை.
எத்தனை காலம்
பிரார்த்தனை செய்தால்
பிறந்த நாளன்று
இறந்துவிடலாம் என்பதை
ஒருவரும் உறுதியாக
சொல்லமுடியவில்லை.
நீண்ட நாள் கனவுதான்
பிறந்த நாளொன்றில்
இறந்துவிடவேண்டுமென்பது.
அதற்கும்
வருடாவருடம்
காத்திருக்க வேண்டும்.
ஒன்றாகவே இருக்கிறது
மக்களோடு நிற்கும்வரை.
எத்தனை காலம்
பிரார்த்தனை செய்தால்
பிறந்த நாளன்று
இறந்துவிடலாம் என்பதை
ஒருவரும் உறுதியாக
சொல்லமுடியவில்லை.
நீண்ட நாள் கனவுதான்
பிறந்த நாளொன்றில்
இறந்துவிடவேண்டுமென்பது.
அதற்கும்
வருடாவருடம்
காத்திருக்க வேண்டும்.
Subscribe to:
Comments (Atom)
-
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
-
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
-
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...