என்றாவதொருநாள்
இறந்துகிடக்கும்
என்னை சுற்றிவரும்
மனிதர்களுக்கு
தெரிந்திருக்கும்
நான் கடவுளென்று....
தூரமாய்
வேடிக்கைப்பார்க்கும்
மாடுகளுக்கும் நாய்களுக்கும் தெரியும்
நான் நன்றியுள்ளவனென்று...
அழுது கண்ணீர்விடும்
மரங்களுக்கும் அமர்ந்திருக்கும்
பறவைகளுக்கும் தெரியும்
நான் உணர்வுள்ளவனென்று...
உனக்கு மட்டும் எப்படியோ
மிருகமாகிப் போனேன்!!!