கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Wednesday, August 17, 2011
ஸ்மிதா
தேவைகள்
தீர்மானிக்கும்
வாழ்க்கையில்
தோல்விகள்
தேடலின்
தொடர்ச்சியே!
Tuesday, August 9, 2011
அலெக்சி
விளக்குகள் ஒளிரும்
மின் இரவுகளில்
துணைவனோடு நடந்து
செல்லும் பெண்கள்...
அன்பை தின்று
செறித்த காதல்
கொன்று குவித்த
மனிதக் கழிவுகள்...
காரணங்களை அசலாக்கி
சண்டையிட்டு பிரிந்தவளின்
அடைபடாத கடனாக
இறந்தவனின் வாழ்க்கை...
கதறி அழுதவளின்
குரலில்
இறந்தவனின்
வலி உணர்த்தும் காதல்...
நம்பிக்கைகளை
வளர்த்திடாமல் நாகரீகம்
காத்திட்ட குற்றவாளியாய்
சுமக்கத் தொடங்கிய
இறப்பின் அர்த்தம்...
ஜனனம் சேர்த்திட்ட
உறவுகளனைத்தும் தொடர்ந்திடாத
மரணம்...
பிரிவதைப் போன்று
எளிதல்ல...முற்றிலுமாய்
இழந்துவிடுவது....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...