சாலையின்
இருபுறமும் இளஞ்சிவப்பு
பூக்கள் உதிர்ந்திருக்கிறது.
கருநிற சாலையை
வெள்ளைக்கோடுகள்
இரண்டாக பிரித்திருக்கிறது.
மரங்களின்
அடர்த்தி பூக்களின்
நிறங்களில் பூசியிருக்கிறது.
ஏதோவொரு ஜமீனின்
பொலிவு இழந்த வீடு
சாலையை ஒட்டியேயிருக்கிறது.
எண்ணற்ற இதயங்களை
எப்பொழுதோ பூட்டிய
ஜமீன் வீட்டை
கடைசிவரை ஒருவரும்
திறக்கவில்லை.
காற்றில் பறக்கும்
பூக்களுக்கு
ஜமீன் வீடு பிடித்திருக்கிறது.
மலர்வனத்தில் நுழைந்து
உறங்கும் நீரோடைகள்
மலர்களையே பூசிக்கொள்கிறது.
இரவுகளில் நடைபழகும்
காலடியோசை
எந்த பூவிற்கு சொந்தமானது?
No comments:
Post a Comment