வளைவை ஒத்திருந்தது
பாதாள சாக்கடையின்
மேற்கூரை.
தேக பாவங்களின்
தீராத மன்னிப்பு
ஆறாக ஓடியது.
வழிநெடுக
துர்நாற்றம்
புனிதமற்று வீசியது.
கண்களில்
வழிந்ததெல்லாம்
கடைசிவரை
கருணையல்ல.
இரக்கத்தின்
வார்த்தைகளை
எப்பொழுது கேட்டதில்லை
அந்த காதுகள்.
இறைவன் கைவிட்ட
மனிதர்கள்
பேராசைக்காரர்கள்.
இறைவனை
கைவிட்ட மனிதர்கள்
ஆசிர்வாதம் உடையவர்கள்.
தங்கள்
பாதைகளை தாமே
உருவாக்கிவிடுகின்றனர்.
No comments:
Post a Comment