நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி
என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங்
கவலையறச் செய்து -மதி
தன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
- பாரதி
உரிமையோடு கடவுளிடம் பேசுகிறான். வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் சத்தியம் தெறிக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் பணிசெய்து இறந்தவனை கனவில் சந்தித்தபோது கேட்டே விட்டேன். சாகித்திய விருது வாங்க எந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டுமென. சிரித்து விட்டு சென்றுவிட்டான். தூக்கம் களைந்து யோசித்த வேளையில் பாரதிக்கு ஏன் பாரத ரத்னா கொடுக்கவில்லை என்ற கேள்வி வந்தது.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
No comments:
Post a Comment