விழித்துக்கொள்ளும்
தருணங்களில்
புறப்பட்டுவிடுகிறது...
மனிதர்கள்
தென்படும்
மண்சாலைகளில்...
பாட்டி அடுக்கி
வைத்திருக்கும்
நெல் மூட்டைகளில்...
ஊறவைத்திருக்கும்
சோற்றுப் பாத்திரங்களில்...
குப்பைகள்
கொட்டிகிடக்கும்
குழிகளில்...
சிகரெட் துண்டுகள்
சிதறிக் கிடக்கும்
டீக்கடை வாசலில்...
சிலநேரம்
வியர்வையோடு
உறங்கிக் கொண்டிருப்பவனின்
உடலில் ...
எப்பொழுதாவது
கால்வாய் கரையோரம்...
உதிர்த்துவிட்ட
வார்த்தைகளைப்போலவே
கொத்திக்கொண்டிருக்கிறது
கோழிக் குஞ்சு.
No comments:
Post a Comment