இறந்துவிடுவதென்ற
முடிவில் தீர்க்கமாய்
நின்றிருந்த எண்ணங்களை
தடை செய்தபடி திடீரென
நின்றது பேருந்து...
காப்பாற்றிய நிம்மதியில்
சற்று நேரம் துடித்து
இறந்து கிடந்தது
சாலையின் குறுக்கே
வழிப்போக்கனின் உடல்...
No comments:
Post a Comment