பெருவெளியின்
கருணையில்
நிரம்பிவழியும் - என்
பாத்திரம்..
வழிந்தோடும்
கருணைத் தழுவிச் செல்லும்
தாவரங்களை
விலங்குகளை மற்றும்
மனிதர்களை...
வெறுப்பின்
நிழல்தேடியும்
விரவும் கருணை
தழுவிச் செல்லுமதன்
பாதங்களை...
வீசும் காற்றின் வேகம்
கடந்திருக்கிறது
இயலாமையின் பெருங்கோபம்...
கடந்து செல்லும்
காற்றோ, கருணையோ
எங்கேனும் நிரப்பிச் செல்லுமொரு
வெற்றுப்பாத்திரத்தை புதிதாய்...
No comments:
Post a Comment