உணர்வுகளை
கொட்டித் தீர்த்த வார்த்தைகள்
நாளொன்றில்
உன்னை சந்திக்க கூடும்...
வெற்றுக் காகிதப் பரப்பில்
நிரப்பிய வார்த்தைகள்
கவிதைகளென்று உன்னிடம்
சண்டையிடக்கூடும்...
எதிர்கொள்ளும் நிகழ்வுகளில்
ஏதேனும் என்னை
நினைவுபடுத்தக் கூடும்....
மின்னஞ்சல் கவிதைகளும்
வலைதள வாசிப்புகளும்
முகப் புத்தக விசாரணைகளும்
என் இருப்பை அறிவிக்க கூடும்...
வார்த்தைகள் தீர்ந்து போகும்
நாளொன்றில் நீ வாசிக்க
கொஞ்சமேனும் மிச்சமிருக்கும்
நீ வாழ்ந்திடாத என் வாழ்க்கை...
No comments:
Post a Comment