ஜன்னல் வழி
நுழைந்த காற்று
கூந்தல் கலைத்துச்செல்லும்...
நெற்றியில் தவழும்
கூந்தல் முடியொதுக்கி
கீழிறங்கும் கைகள்...
இடது கையெடுத்து
மொத்தமாய் அள்ளி
வலது காதோரம் தள்ளிச்
செருகும்பொழுதுகளில்
காற்றில் களையும்
மேலாடை...
விரல்களில் நுழைந்த
கணையாழி இறங்க மனமின்றி...
சங்குபூ காதணி
நட்சத்திர மூக்குத்தியில் ஒளிரும்...
தொண்டைக்குழி இறங்கும்
வியர்வைத்துளிக்கு
கொஞ்சமேனும்
அதிர்ஷ்டமிருக்கிறது...
கண்களின் உண்மையில்
யாரெனத் தெரியாது...
உன்னோடு
பேசும் தருணங்களில்
காற்று கலைத்துவிடும்
என் கவனத்தை
மீட்டெடுப்பது எவ்வாறு?
No comments:
Post a Comment