இரவுகளில்
துளிர்க்கும்
இசைப்பாடல்களின்
சுகந்தம் பகலிலும்
நீண்டுவிடுகிறது...
காதலை சொல்லிச்சென்ற
பெண்ணொருத்தியின் கனவுகளில்
அரை நிர்வாணமாய்
ஆண்கள்...
விளக்குகள்
அணைந்திடாத
வீடுகளில்
குழந்தைகள்
உறங்குகின்றன...
படிக்கட்டுகளில்
ஏறிவரும் யாரும்
நிலாவைத் தொடுவதில்லை...
நெற்றியில் முத்தமிட்டு
நீரோடிய விழிகளோடு
கடைசியாய்
கட்டியணைத்த
நாளொன்றில் நீ
கையில் திணித்த
ஒற்றைரூபாயும்
தொலைந்து போனது
உன் நினைவுகளோடு...
துளிர்க்கும்
இசைப்பாடல்களின்
சுகந்தம் பகலிலும்
நீண்டுவிடுகிறது...
காதலை சொல்லிச்சென்ற
பெண்ணொருத்தியின் கனவுகளில்
அரை நிர்வாணமாய்
ஆண்கள்...
விளக்குகள்
அணைந்திடாத
வீடுகளில்
குழந்தைகள்
உறங்குகின்றன...
படிக்கட்டுகளில்
ஏறிவரும் யாரும்
நிலாவைத் தொடுவதில்லை...
நெற்றியில் முத்தமிட்டு
நீரோடிய விழிகளோடு
கடைசியாய்
கட்டியணைத்த
நாளொன்றில் நீ
கையில் திணித்த
ஒற்றைரூபாயும்
தொலைந்து போனது
உன் நினைவுகளோடு...
No comments:
Post a Comment