கலைந்து
கிடக்கும்
மனதை
அடுக்கி வைக்கும்
புத்தகம்...
ஒளிந்து
கிடக்கும்
மனதை
ஒளிரச் செய்யும்
கவிதை...
விழுந்து
கிடக்கும்
மனதை
நடக்கச் செய்யும்
நம்பிக்கை...
உடைந்து
கிடக்கும்
மனதை
இணைத்து வைக்கும்
காதல்...
அழிந்து
கிடக்கும்
மனதை
துளிர்க்கச் செய்யும்
நட்பு...
விளைந்து
கிடக்கும்
மனதை
அறுவடை செய்யும்
உலகம்....
வியாபார உலகம்...
Nice Jee....Good keep writing
ReplyDelete