நட்சத்திரங்கள்
உறங்கச்சென்ற
நாளொன்றில்
தனிமையில் உறங்கிய
நிலவொன்றின்
கனவுகளில்
குதிரையில் பவனித்த
கதிரவனின்
கரங்களில் தவழும்
சிதைந்த நம்பிக்கைகள்
உதிர்க்கும்
நிராகரிப்பின் வலி....
காத்திருப்பின்
நீளமறியும் தருணங்களில்,
தவிப்பின்
வலியுணரும் சமயங்களில்,
பிரிவின்
அதிர்வுகளில்
பெருக்கெடுக்கும்
கண்ணீர்த்துளிகள்....
பூக்களைப் போன்று
மலர்வதில்லை
மனிதர்கள் தினமும்....
No comments:
Post a Comment