உண்ணும் நிலையாலே
உயிர் அடையும் இன்பமெல்லாம்
உனை எண்ணும் நிலையாலே
இவன் அடைய மாட்டானோ!
கன்னி அவள் நினைவு
கண் நிறைந்து நின்றாலும்
சொன்ன நாளில் அவள்
மலர் சூட வரவில்லை!
வஞ்சம் செய்தாலும்
நெஞ்சகத்தே வலியில்லை.
கொஞ்சியவள் வார்த்தைகளில்
கோபம் மறந்தானே!
கன்னி நெஞ்சதுவோ...
கல் நெஞ்சதுவோ...
பிஞ்சு மனதாலே
பேதலித்து
புலம்புகிறான்!
கோதையவள் பேச்சில்
போதையானான்
யார் இவனோ...
No comments:
Post a Comment