எதிர்ப்படும்
நேரத்தில்
கடந்துசென்ற
வாகனத்தின்
ஒளியென
சூன்யத்தில்
ஆழ்த்துகிறது
தனிமை...
நள்ளிரவு
காற்றின் குளுமை
முருங்கைமர இலைகளின்
மேனி வருடிச்
செல்கிறது...
பரந்த ஆலமரத்தின்
நிலம் தொடாத
விழுதென
ஆடுகிறது
இறந்து ஒழியாத
உன் நினைவுகள்...
மனிதர்களற்ற
இரவுகளில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
ஒளிர்கிறது
மின்விளக்குகள்...
அலைந்து திரியும்
மிருகங்களின்
நிழல்கள்
நரியென நகர்கிறது...
இறந்தகால
நினைவுகளோடு
உறங்க இடம்
தேடியலைகிறது
மனது...
நாய்களின்
சப்தங்களோடு
வேட்டைக்காரனாய்
குதிரையில்
வருகிறேன்...
அயர்ந்து
உறங்கும் நீ
விழித்துக் கொள்கிறாய்
திறக்காத கதவு
அடைத்திருப்பதை
உறுதிசெய்து
உறங்கச் செல்கிறாய்
மீண்டும் கனவில்...
உடைந்த
தேங்காயின்
ஒருபாதியாக
ஒளிர்கிறது
நிலா...
அடைக்கமுடியா
ஜன்னல் கதவின்
இடுக்கு வழியே
நுழைந்த காற்று
கலைத்துவிட்டு
செல்கிறது
என் நினைவுகளை...
இரவெல்லாம்
அழுத கண்ணீர்
இலைகளில்
பூக்களில்
துளிர்த்திருக்கும்
பனித்துளியாக.
நன்றாக இருக்கிறது
ReplyDelete