கவிதைகள்
புறக்கணித்த
வார்த்தையொன்று
கடலுண்ட மனிதர்களின்
ஓயாத மூச்சுக் கற்றென
அலைகிறது...
உறக்கம்
தொலைத்தவனின்
குற்றங்களென
உறுத்துகிறது...
காற்றின் வீச்சில்
அலைவுறும் விசைப்பலகை
பூக்களென
அதிர்கிறது...
ஏணிகளில் ஏறி
பாம்புகளில் இறங்கி
பரமபத பகடைகளென
உருளுகிறது...
முயன்று தோற்று
மீண்டும் நிகழ்த்துகிறது
நிகழ்ந்துவிடாத நிகழ்வுகளை
மௌனங்களில்...
தலைகீழ் விகிதத்தில்
கலந்த மதுவென கசக்கிறது
வார்த்தைகளால் தோற்று
நகரும் என் உருவம்...
No comments:
Post a Comment