உரையாடும் தருணங்களில்
நானறியாமல்
வந்துவிழும்
உன் வார்த்தைகள்
வெட்கம் கொள்ள செய்கிறது ...
என்னை!
யாரும் கேட்டிடாத
நேரத்தை
யாருக்கோ
சொன்னவனாய்...
------------------------------------
காற்றில்
நூலறுந்த
பட்டமென...
இருப்பின்றி
பறக்கிறது
இதயம்,
நீயும்
இதே ஊரில்
இருப்பதறிந்து !
No comments:
Post a Comment