அடர்ந்த வனத்தின்
மனிதர்களற்ற வெளியில்
தவமிருக்கும் பூவென...
பரந்த வயல்வெளியின்
சலனமற்ற நீர்ப்பரப்பில்
நின்றிருக்கும் பறவையென...
விரிந்த ஆகாயத்தின்
ஏதோவொரு மூலையில்
சூல்கொண்டிருக்கும் கருமேகமென...
அனைத்தும்
அர்த்தப்படுகிறது
ஏதோவொரு
காத்திருப்பாக...
எதிர்நோக்கும்
உன் வருகையைத் தவிர்த்து !
No comments:
Post a Comment