முன்பைவிட
அதிக பாசமாக இருக்கிறார்.
ஆசைப்படுவதை எல்லாம்
வாங்கித் தருகிறார்.
நேரத்திற்கு வீட்டிற்கு
வருகிறார் - அவராகவே
சமைக்கிறார், துவைக்கிறார்,
சுத்தம் செய்கிறார்.
சிகரெட், விஸ்கி
இன்றி இருக்கிறார்.
அச்சுறுத்தும் இரவுகளில்
அருகிலேயே உறங்குகிறார்.
எல்லாம் சரியாக இருக்கிறது
"அம்மா ஓடிப் போனதிலிருந்து "
சில நாட்களாக
குளிக்கும்பொழுது
யாரோ
பார்ப்பதாகவே
தோன்றுகிறது.
யாருமில்லாத வீட்டில்
யாராக இருக்கும்
அப்பாவைத் தவிர ?
No comments:
Post a Comment