மாலை நேரத்து
அடிவானமென
சிவந்து கிடக்கிறது
உன் முகம்...
கல்லறைகளில்
ஜீவிக்கிறது
சிலுவைகள்...
யாருக்கும் புலப்படாத
காற்றைத் தேடி
அலைகிறது
பாய்மரம்...
கருவறையின்
பின்னே
மறைகிறது
சூரியன்...
பாறைகளில்
நின்றவண்ணம்
அலைகளை
ஏசுகிறான்
ஒருவன்...
பறவைகளோடு
பறக்கிறது
பட்டங்கள்...
குழந்தைகளோடு
போட்டியிட்டு
நிசப்திக்கிறது
அலைகள்...
யாருமற்ற
மணல்வெளிகளில்
என்னோடு
சண்டையிட்டு
பிரிந்து செல்கிறாய்...
என் எழுத்துக்களில்
நீயும்
உன் வார்த்தைகளில்
நானும்
தோற்றுக்கொண்டிருக்கிறோம்
ஒருவரிடமொருவர்...
நீண்டு கொண்டேயிருக்கிறது
கடலின் இருப்பு...
No comments:
Post a Comment