விருப்பமானது
இல்லையெனினும்
புறப்படும் நேரமிது...
வாசித்துறங்கும் பொழுதுகளில்
உன்னோடு பேசிக்கொண்டு
இருப்பதற்காக
சில வார்த்தைகளையும்
நிறைய ப்ரியத்தையும்
விட்டுச் செல்கிறேன்...
யாருமற்ற
மஞ்சள் பூ மரக்காடுகளில்
அமானுஷ்யம் பரவும்
மலை முகடுகளில்
இசைத்தபடி
நடனமிடும் அருவிகளில்
உன்னோடு பேசிக் கொள்வேன்...
கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்
இன்னும் இடைவெளியை
அதிகரித்து விடவேண்டாமென்று...
No comments:
Post a Comment