மெலிதாய்
புலர்ந்திருக்கிறது பொழுது
சூரிய ஒளிக்கதிர்களின்
தழுவலில் விழித்துக்
கொள்கிறது சமவெளி சரிவுகளில்
படர்ந்திருக்கும் அருகம் புல்
வடக்கிலிருந்து
தெற்கு நோக்கி செல்கிறது
குதிரை வண்டி சுமைகளோடு...
குரைத்தபடி
ஓடிக் கடக்கிறது நாயொன்று
பாலத்தை...
வெளிச்சம் படாமல்
வளர்கிறது
கட்டி முடிக்காத கோட்டை...
இலைகள் உதிர்ந்து
நிற்கிறது கருவேல மரம்...
கருமையாய் நகருகிறது
அடர்ந்த மேகம்...
நீ வந்து நிரப்புவதற்காக
எஞ்சியிருக்கிறது
கொஞ்சம் இடம்...
No comments:
Post a Comment