உறக்கம் வராத
இரவுகளில் கூடவே
வருகிறது குல்ஃபி ஐஸ்
மணி சத்தம்...
பக்கத்து வீட்டுப்
பூனைக்குட்டி
கடந்து செல்கிறது
மனிதர்களற்ற தெருவின்
இடது புறத்திலிருந்து...
இருட்டாக இருக்கிறது
சோடியம் விளக்குகளின்
மேற்புறம்...
மல்லிகைப் பூக்களோடு
வாசல்படியில் வந்தமர்ந்த
பெண்ணொருத்தியின்
நினைவுகளில் யாரோ...
No comments:
Post a Comment