நகரங்கள்
மாநகரங்களை
கிராமங்கள்
குக்கிராமங்களை
இணைக்கும்
சாலைகள்
பயணிக்கும்
இடங்களும்
பயணிப்பவர்
இடங்களும்
எப்பொழுதும் ஒன்றாகவே
இருப்பதில்லை...
வளைவு, நெளிவுகளும்
மேடு பள்ளங்களும்
இல்லாத சாலைகளை
கண்டடைவது எளிதல்ல....
பெரும்பான்மை
புறவழிச் சாலைகள்
ஒதுக்கிச் செல்லும்
சிற்றூர்களை,
சேரிகளை....
இறந்துபோன
மனிதர்களோ
விலங்குகளோ
அரூபமாய்
நடமாடக்கூடும்
சிலஇடங்களில்....
ஆலயங்களை
சுடுகாடுகளை
நீரோடைகளை
சாக்கடைகளை
கடந்து செல்லும்
சாலைகள்
வாழ்க்கை குறித்தான
தத்துவங்களை
உணர்த்திச் செல்லும்...
சாலைகளைப் போன்று
விபத்து குறித்தான
எச்சரிக்கை
அறிவிப்புகளோடு இல்லை
பெண்கள்...
No comments:
Post a Comment