நட்சத்திரங்களைப்
புதைத்துவைத்த
மயானங்களில்
விளக்கென ஒளிரும் நிலவு...
ஒளியை மறைத்து
பனிமூட்டமாய்
நகரும் மேகங்கள்....
உறவுகள்
அழுத கண்ணீரென
மழைத்துளி...
இடியொலியின்
நின்றுவிடாத மூச்சு
மின்னலை அனுப்பி
வேவு பார்க்கும்...
இறந்துவிடாத
நம்பிக்கையில்
நாளையேனும்
பிறக்கக்கூடும்
என் எதிர்காலம்...
No comments:
Post a Comment