உடைந்த
அதிகாலைப் பொழுதொன்றில்
என் நினைவுகள் களவுபோனது...
தாயின் பாசத்திலும்
தந்தையின் அன்பிலும்
சகோதரனின் நம்பிக்கையிலும்
சகோதரியின் எதிர்பார்ப்பிலும்
எதிரிகளின் வஞ்சத்திலும்
நண்பர்களின் தோழமையிலும்
கண்டடையமுடியா நினைவுகளை
நீ கடத்திச் சென்றதை
அறிந்து திடுக்கிட்ட தருணமொன்றில்
அலைபேசியில் அழைத்து
நினைவுகளைத் தருவதற்கு
பிணயமாய் காதலைக் கேட்டாய்...
தொடர்புகள்
துண்டிக்கப்படும் நிகழ்வுகளில்
நினைவுகளைக் கடத்துவதுன் வாடிக்கை...
மஞ்சள் பூவிதழ்கள்
விரவிக்கிடக்கும்
பச்சைப் புல்வெளிக்
கல்லறைத் தோட்டத்திற்கு
காதலை சுமந்தபடி வந்தடைந்தேன்...
கண்களில் முத்தமிட்டு
காதலைப் பருகி என்
நினைவுகள மீட்டுத்தந்தாய் ....
மனிதர்களற்றப் பெருவெளியில்
அனைவருக்கும்
சொல்லிவிட்டு உன்னிடம் வந்தேன்...
தொலைவைக் கடந்து
நடந்து சென்றது
பிரதிமையற்ற ஒன்று...
No comments:
Post a Comment