அடர்ந்த
பனிமூடிய
புல்வெளிகளில்
தனித்துக் கிடந்த
நாளொன்றில்
கருத்திருந்தது
ஆகாயம்....
இதயங்களை
மறைத்திருந்த
கிரகணங்களில்
ஒளிந்திருந்தது
நம்பிக்கையின்மை...
வனங்களை
மறைத்திருக்கும்
இலைக்கூட்டம்
நினைவுகளில்
விழும்....
நிறைந்த
குற்றச்சாட்டுகளில்
தனியாக
அழுத நினைவுகள்....
பள்ளத்தாக்குகளின்
அபாயகரமான
செங்குத்துச்
சரிவுகளில்
வேறொருவரும்
கேட்டறியாத
இசைக்குறிப்பின் ஒலி
தனித்துயேறும்
வலிமையறச் செய்யும்...
அகன்ற பரப்புகளில்
சுற்றியிருக்கும்
வெற்றிடங்களில்
தனித்தே கடந்து செல்லும்
வாழ்க்கை...
விரிவடையும்
பரப்புகளில்
நசுக்கப்படும்
நம்பிக்கைகள்
மெல்ல இறந்துவிடும்...
வசந்தகாலத்தின்
மெல்லிய மூச்சுக்
காற்றின் பகிர்ந்து
கொள்ளப்படாத
ஆன்மா
தனிமையில் வெட்கும்
நீயின்றி....
பனிமூடிய
புல்வெளிகளில்
தனித்துக் கிடந்த
நாளொன்றில்
கருத்திருந்தது
ஆகாயம்....
இதயங்களை
மறைத்திருந்த
கிரகணங்களில்
ஒளிந்திருந்தது
நம்பிக்கையின்மை...
வனங்களை
மறைத்திருக்கும்
இலைக்கூட்டம்
நினைவுகளில்
விழும்....
நிறைந்த
குற்றச்சாட்டுகளில்
தனியாக
அழுத நினைவுகள்....
பள்ளத்தாக்குகளின்
அபாயகரமான
செங்குத்துச்
சரிவுகளில்
வேறொருவரும்
கேட்டறியாத
இசைக்குறிப்பின் ஒலி
தனித்துயேறும்
வலிமையறச் செய்யும்...
அகன்ற பரப்புகளில்
சுற்றியிருக்கும்
வெற்றிடங்களில்
தனித்தே கடந்து செல்லும்
வாழ்க்கை...
விரிவடையும்
பரப்புகளில்
நசுக்கப்படும்
நம்பிக்கைகள்
மெல்ல இறந்துவிடும்...
வசந்தகாலத்தின்
மெல்லிய மூச்சுக்
காற்றின் பகிர்ந்து
கொள்ளப்படாத
ஆன்மா
தனிமையில் வெட்கும்
நீயின்றி....
No comments:
Post a Comment