இறைச்செய்தியோடு
வழிதவறிய தூதனை
ஆடுகள் தின்று செரிக்கும்
கலிகாலமொன்றில்
கண்டடையக் கூடும்
விலங்குகள் தேர்வுசெய்த
கடவுளொன்றை....
மனிதம் தின்று
மதம் பிடித்தலையும்
கூட்டமொன்று
கடவுளை காவு கேட்கும்....
விரல்களைத் தாண்டி
வளரும் நகங்களை
மென்று துப்பும்
உறவுகள் உரிமையை
இழந்தபின்னும்
ஊமையாய் நக்கிப் பிழைக்கும்
எச்சில் இலையை...
உச்சம் தொடாத
வாழ்க்கையொன்றில்
மிச்சமாய் என்ன இருக்கும்?
No comments:
Post a Comment