Friday, September 29, 2017

பெருங்கனவு பேரரசி - அனிதா

ஆண்டாண்டு 
காலமாய் சுமந்து 
திரிந்த கனவுகளை 
கொன்று தின்ற
அரச பயங்கரவாதிகளின்
காட்டுமிராண்டி
ஆட்சியில்
மரணம் விடுதலையே!
தோல்விகளை
துயரங்களை
வலிகளை
கடந்திட உதவா
கல்விமுறைகளுக்கு
மரணம் விடுதலையே!
காவிகள்
கைமுறித்து
காலடி தடமழித்த
கனவுகளின்
முதல்வர்
இறந்த உடலில்
அரசியல் நர்த்தனம்புரியும்
கபட மூடர்களைவிட
மரணம் விடுதலையே!
அறிவை
ஆயுதமாக்கி
அன்பால்
அரவணைத்து
நிற்காத
அயோக்கியர்கள்
ஆட்சியில்
மரணம் விடுதலையே!
பெருங்கனவு
பேரரசியே!
பிரிந்தும்
இறந்தும்
ஊர் சொல்லும்
உன்னை
எப்பொழுதும்
நீ
எங்கள் வீட்டுப்
பிள்ளை!
தமிழ் வீட்டுப்
பிள்ளை!

No comments:

Post a Comment