மூதாதையர்கள்
செய்த
பாவமெல்லாம்
வாரிசுகள்
தலையிலே
விடியுமென்பதில்
எப்பொழுதும்
நம்பிக்கையில்லை…!
ஆனால்
வாக்குச்சீட்டுக்கு
வாய்க்கரிசி
போட்டவர்களின்
வாரிசுகள்
நிலைதான்
பாவம்….
வாய்கிழிய
வாதிடும்
அரசியல்வாதி
யாரையேனும்
கண்டால்
அவர் வாயில்
மிதித்துவிடு
தோழா…!
********************செய்த
பாவமெல்லாம்
வாரிசுகள்
தலையிலே
விடியுமென்பதில்
எப்பொழுதும்
நம்பிக்கையில்லை…!
ஆனால்
வாக்குச்சீட்டுக்கு
வாய்க்கரிசி
போட்டவர்களின்
வாரிசுகள்
நிலைதான்
பாவம்….
வாய்கிழிய
வாதிடும்
அரசியல்வாதி
யாரையேனும்
கண்டால்
அவர் வாயில்
மிதித்துவிடு
தோழா…!
இடுப்பு பட்டை
இருக்கக்கூடாது..
கையணிகள்
இருக்கக்கூடாது…
கழுத்தணிகள்
இருக்கக்கூடாது…
உடைகளும்
உங்கள்
விருப்பங்களல்ல….
நன்று!
சமண பெளத்த
துறவிகளாய்
மருத்துவ
தேர்வெழுத மாநிலம்
கடந்து செல்லும்
மனிதர்களின்
கேள்விகளெல்லாம்
இன்னுமாடா
இந்தஉலகம்
கடவுள் உண்டென
இயங்குகிறது…?
பெரிய
மனிதர்களின்(!)பேராசைகளெல்லாம்
எளிய
மனிதர்களின்
ஏமாற்றங்களிலேதான்
பூர்த்தியடைகிறது...
எளிய
மனிதர்களின்
ஏமாற்றங்களிலேதான்
பூர்த்தியடைகிறது...
No comments:
Post a Comment