அடர் சிவப்பு
நிறத்திலிருந்தது
அந்த படகு...
நீலம் கலந்த
பசுமையுடனிருந்தது
நீர் பரப்புகளின்
எல்கைவரை...
கருநிற குல்லாயுடன்
படகிலிருந்தாள்
வெள்ளைநிற சிறுமி...
கண்ணுக்கெட்டிய
தூரமெல்லாம்
வெளிர் சிகப்பு நிற
பூக்கள்...
பிறிதொரு
படகிலிருந்த
பெண்ணொருத்தி
வீசிய வலையில்
சிக்கியதெல்லாம்
மனித உடல்கள்...
தாமரை
முகிழ்த்த
கடல் அது...
உதிரத்தை
குடித்தே
உயிர்வாழ்கிறது
இந்த உடலும்
நந்தி கடலும்...
நிறத்திலிருந்தது
அந்த படகு...
நீலம் கலந்த
பசுமையுடனிருந்தது
நீர் பரப்புகளின்
எல்கைவரை...
கருநிற குல்லாயுடன்
படகிலிருந்தாள்
வெள்ளைநிற சிறுமி...
கண்ணுக்கெட்டிய
தூரமெல்லாம்
வெளிர் சிகப்பு நிற
பூக்கள்...
பிறிதொரு
படகிலிருந்த
பெண்ணொருத்தி
வீசிய வலையில்
சிக்கியதெல்லாம்
மனித உடல்கள்...
தாமரை
முகிழ்த்த
கடல் அது...
உதிரத்தை
குடித்தே
உயிர்வாழ்கிறது
இந்த உடலும்
நந்தி கடலும்...
No comments:
Post a Comment