Saturday, June 16, 2018

ஒலிவியா

தேவாலயத்தின்
நேரெதிர் சாலை…

இருபுறமும்
அடர் பச்சைநிற
மரங்களின் ஊடாக
மஞ்சள் சிவப்பு
மலர்கள்…

விழுந்துகிடந்த
சிறுபறவையின்
உடலெங்கும்
இரணங்கள்…

பறவையின்
மீதேறி
பிரார்த்தனைகூடம்
விரைந்தது
சிற்றுந்து,
குழந்தைகளின்
இரக்கத்துடன்….

அதிகாலை
மண்வாசனையில்
விரவியது
பறவையின்
உதிர வாடை
நடைபயிற்சிக்கு வந்த
வழிப்போக்கன் வரை…

மரித்த
பறவையை
அடக்கம்செய்தவன்
மீது மலர்களை
சொரிந்தது மரங்கள்
தேவாலய மணியொலியின்போது….

மீண்டும்
திரும்பவில்லை
அந்த ஞாயிற்று கிழமையும்,
வழிப்போக்கனும்…

No comments:

Post a Comment