Friday, November 8, 2019

சசித்ரா தேவி

செந்நிற ஒளிவிரவும்
சாலை வளைவுகளில்
உதிர்ந்துகிடந்தன
மஞ்சள் சிகப்பு நிற மலர்கள்…!

அமானுஸ்யம்
நிரம்பிய காடுகளில்
முளைத்துகிடந்தன
வெள்ளை பச்சை நிற புற்கள்…!

முகம்தெரியா
பெண்ணொருத்தியின்
கரங்களில் முழுமையாய் இருந்தது
தியானமுத்திரை…!

புத்தனை
தேடியலைந்த வண்ணத்துப்பூச்சிகள்
சுற்றியமர்ந்தன அவளருகே
நிர்வாணமாய்...!

புற்களின் தலைதாழ்த்திய
பனித்துளிகள் யாவும்
இறுதியாய்
உடைந்து கனமிழந்தன
செந்நிற ஓளியில்…!

நிழற்பட கலைஞன்
சுமந்தலைந்த
கனவுகளின் இறுதியாய்
புதைந்துபோனது
ஒளியோடு...!

No comments:

Post a Comment