தேவாலாய தெருக்களில்
நடந்துசென்ற
பாலகர்களின் கூட்டம்…!
சிறுவர்களும் சிறுமிகளும்
ஆறு வயதிலும், ஏழு வயதிலும்..!
கிழக்கு மேற்கு தெருவில்
நீண்டிருந்த நிழல்கள்
உச்சிவெய்யில் உபயம்…!
பெளத்தம் பரிமளித்த
குழந்தைமையில்
கோபக்கனல் தெறிக்கும் சோகம்…!
வருத்தங்களை பாரமாய்
சுமந்தலைந்த குழந்தைகள்
கைகளிலெல்லாம்
பருகுவதற்கு ஏதுமில்லா
வெற்று நீர்க்குடுவை
அன்பை நிரப்புவதற்கு ஏதுவாக…!
பாவிகளுக்காக
தன்னை மாய்த்துகொண்ட
தேவமைந்தன் சிலுவையில்
வழிகிறது இன்னும் குருதியின் சுவடுகள்…!
No comments:
Post a Comment