Monday, January 27, 2020

சாம்பலும் மலர்களும்

இன்று
துக்கம் மற்றும் வலிகளெனும்
இழையில்
உன்
நினைவுகளில்
பறித்த
மலர்களை
கட்டினேன்….

நாம்
ஒன்றாகயிருந்த
கணங்களில்
மலர்ந்த பூக்களை
கைவிடப்பட்ட
அன்பின்
பாலைவனத்தில்
பறித்தேன்…..

பிறகொருநாள்
உன்
நினைவுகளின்
நாட்களுக்காக
உன்
வீட்டு வாயிலில்
சமர்ப்பித்தேன்

ஆசையெனும்
குவளையின்
அருகருகே
அமைந்தன
பிரிவின் சாம்பலும்
நம்
காதலின் மலர்களும்…!
#######################################
உருது          : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா

No comments:

Post a Comment