Thursday, May 14, 2020

சூர்ப்பனகை

மலையடிவார
நீரோடையை நிரப்பியிருக்கிறது
சிறியதும் பெரியதுமாய்
மரங்களின்
மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிற
வண்ணங்கள்.

ஆகாய பறவைகள்
தவறவிடும் எதுவும்
நீரை விலக்கினாலும்
மரங்களின் பிம்பங்கள்
விலகுவதில்லை.

பெருங்காற்றில்
அலைவுறும் மரங்கள்
பிம்பங்களையும் சேர்த்தே
அசைத்துவிடுகிறது.

நிஜங்களின் அலைவுறல்
நிழல்களை அசைப்பது - இயற்கை
நிழல்களை அசைப்பதால்
நிஜங்கள் அலைவுறல் -செயற்கை
நிழல்களை அசைக்கமுடியாது என்பதே
நிதர்சனம்.

பெருந்தனிமை
பிறழ்வுகளில்
பிக்குகளாகிவிடும் பொருத்தமற்ற நிழல்களின் பிரதிமையே
பெரும்பொருள்.

No comments:

Post a Comment