Friday, May 22, 2020

ஜெஸ்ஸிகா

திறந்திருந்த ஒற்றை

சாளரத்தின்

வழியாக வீசியது

மழை நனைத்த காற்று!

அதீத குளிர்காற்று

அமானுஷ்ய இரவுகளின்

உறக்கத்தை கலைத்தபடி

அலைவுறுகிறது!

மின்விளக்குகள்

ஒளிராத

நடுநிசியில்

கனவுகள்

வெளிச்சமிடுகின்றது!

தொலைந்துபோன

மனிதர்களை தீராத

கனவுகள் மீட்டெடுத்திருக்கின்றது!

தொலைதலில்

இன்புறும் இதயங்களில் 

மானுட ஜீவிதத்தின்

மாண்புகள் நிரம்பியிருக்கிறது!

ஜீவிதங்களின் நிறைவாய்

கனவுகளை மீட்டெடுக்க

நிற்காமல் தொடர்ந்து 

பெய்தது மழை!

மண்வாசம்

எழுப்பும் மழையின்

எந்த துளி முதலில்

விழுந்திருக்கும்

மானுட முயற்சிகளுக்காக!

No comments:

Post a Comment