அவர்களுடைய
கனவுகள்
அவர்களுக்கு.
அவர்கள்
கனவுகளோடு
புதைந்தார்கள்.
கனவுகளோடு
வாழ்ந்தார்கள்.
அவர்கள்
கனவுகளோடு
புதைகிறார்கள்.
கனவுகளோடு
வாழ்கிறார்கள்.
அவர்கள்
கனவுகளால்
புதைந்திடக்கூடும்.
கனவுகளால்
வாழ்ந்திடக்கூடும்.
கனவுகளில்
புதைவதும் வாழ்வதும்
விடுதலை அடைதல்.
புதைந்து போதலின்
மீட்சி
வாழ்தல்.
வாழ்ந்து போதலின்
மீட்சி
புதைதல்.
அனைத்து
கனவுகளையும்
அதைக் கொண்டவர்களையும்
பூமியில் புதைத்துவிட்டு
எப்போதும் வாழ்கிறது
காலம் !
No comments:
Post a Comment