Wednesday, June 10, 2020

மணிமேகலா

அவரது
சட்டை மிகவும்
பிடித்திருந்தது.

ஒரு வங்கியின்
இலட்சினையின்
நிறம்.

பச்சையும்
வாடமல்லியும்
கலந்திருந்தது.

ஆகாயத்தை
பார்த்தபடியே
இருந்தார்.

ஏதோவொரு
மரத்தில் சுற்றியிருந்தது
அவரது கைலியின் ஒரு முனை.

கால்களை
அழுத்தியிருந்த
இலைகள் உதிர்ந்த
தரையில் வேறுபாடுகளில்லை.

எல்லா
தற்கொலைகளிலும்
காவலர்கள் சொல்வதற்கு
கதைகள் இருக்கிறது.

நின்றுகொண்டே
தூக்கிட்டு
தற்கொலை
செய்துகொள்ள
எவ்வளவு நீளம் வேண்டும்
கோவணத்துணி.

இடம்பெயர்ந்த
கத்தியொன்று
இடது பெருவிரலை
ஆசிர்வதித்த நாளொன்றில்
உறங்கவிடாமல்
வலிக்கிறது காயம்.

இந்த நாட்கள்
இன்னும் அரிதாகவே
இருக்கிறது.


No comments:

Post a Comment