இந்நாள் எழுத்தாளர்
ஒருவர்
அரசுப்பணியிலிருக்கும்
எழுத்தாளர்களின் மீது
அவதூறு வழக்கிடுகிறார்.
கர்ப்பிணி பெண்ணொருத்தி
இறந்துவிட்ட கணவனின்
மரணம் நடிப்பாக இருக்க
பிரார்த்திக்கிறாள்.
கொரோனா லாக்டவுன்
காலமொன்றில்
பொதுத்தேர்வுகள்
விருப்பமின்றி
இரத்து செய்யப்படுகிறது.
முன்னாள் எழுத்தாளர்
ஒருவர்
தேர்வு ரத்துக்கு
எதிராக கருத்துக்களை
பதிவுசெய்கிறார்.
ஒற்றைக் கையில்
குழந்தையை தாங்கியபடி
காவல்காரரிடம்
முதுகுகாட்டி அடிவாங்கிக்
கொண்டிருக்கிறாள்
நெடுஞ்சாலையொன்றின்
குறுக்காக
நாடோடி பெண்ணொருத்தி.
பல்மருத்துவம் படித்த
பொதுவுடைமை தோழர் ஒருவர்
பொதுமருத்துவப் பலனின்றி
இறந்துபோனார்.
இந்த இரவும்
நிம்மதியை
பறித்துக்கொண்டே
பிரயாணிக்கிறது.
No comments:
Post a Comment