மயிலாக வந்துநிற்கும்
மாயப் பிசாசு!
மார்பு முலைகாட்டி
மயக்கிடுமே அவள் தேகம் !
கூடும் இன்பத்தை
கொடுக்கின்ற துர்புத்தி
தானதனால் கொள்வானே
அவள் தேகம் குணமிழந்து !
விவேகம் அறியாமல்
வினைவலியும் உணராமல்
சீறும் வினையதுவின்
சிநேகத்தில் வீழ்வானே !
தேகம் பொய் மறந்து
வேகம் தனதாக்கி
வீழ்வானே...காமப்பேயின்
கடுஞ்சிறையில்...தானாக !
நாணந்தனை இழந்து
நடுவீதி தானின்று
பார்வையிலே பேசினாலும்
பாவையவள்
கூற்றுவன் தூதன் தானே !
கோதையவள் தீது என்றுணர்ந்து
பேதை மனத்தை நீ பிடிப்போடு இருக்கச்செய்
என் இறைவா !!!
பட்டினத்து அடிகளின் பாடலைப் படித்துவிட்டு எழுதியது...
Hi
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்