நீண்ட பயணத்தின்
விடியாத இரவுகள்
இன்னும் நீளச்செய்கிறது
நினைவுகளை...
மின்சாரக் கம்பிகளை
மிதித்தெளும்பும்
பறவையாக
விருட்டென்று பறக்கிறது
மனது...
பூக்களின்
நிறமிழந்த
மரத்தின் கீழே
குளிக்காத பறவையொன்று
அசிங்கம் செய்த
ஆடையோடு
நிற்கிறேன்...
உன் வருகைக்காக
பிறிதொரு நாளில்!
No comments:
Post a Comment