தினமும்
ஒன்றிரண்டு முறையாவது
கேட்கப்படுகிறது.
நண்பர்களும்,
நண்பர்கள் அல்லாத சிலரும்
வினவுகிறார்கள்.
சிலருக்கு அக்கறை
சிலருக்கு பொழுதுபோக்கு.
ஒவ்வொருமுறையும்
வார்த்தைகளற்ற
புன்னகையை
பதிலாக்கிக் கொண்டிருந்தேன்.
நேற்று கூட
கூட்டமாக நின்றிருந்த
இடத்தில் பெண்ணொருத்தி
சப்தமாக கேட்டாள்.
அவமானமாக இருந்தது...
இப்பொழுதெல்லாம்
குழந்தைகளைப் போன்று
புன்னகைக்க முடிவதில்லை...
தார் சாலைகளில்
விழுந்துடைந்த
பனிக்கட்டியாக
வெம்மை தாங்காமல்
உருகுகிறது
சுயம்...
தொண்டைக்குள்
சிக்கிய முள்ளென
அறுத்துக் கொண்டிருக்கும்
"எப்பொழுது திருமணம் "
என்ற கேள்விக்கு
என்ன பதில் சொல்வது
உன்னைக் கேட்காமல்...
தோழரே!
ReplyDeleteஏன் இப்படி? என்ன உணர்ச்சி இது? எனக்குப் புரியல :(
-ப்ரியமுடன்
சேரல்