அடகு வைத்த
வாழ்க்கை...
மீட்கமுடியாது
இறைவன்..
பறவைகள்
இரை தேடும்
நாட்களிலும்
கலந்திருக்கிறது
காதல்...
உயர்ந்திருக்கும்
மரங்கள் சொல்லும்
வடுக்களெல்லாம்
வாழ்க்கையென்று....
அடர்ந்த காரணங்களில்
ஒளிந்திருக்கும்
மனிதர்கள்
கலைத்துவிடும்
காலம்...
போர்முறை
வேறென்றாலும்
வேறுபடுவதில்லை
அமைதி...
இழந்துவிடுவோம்
என்பதன் அச்சம்
வாழச் சொல்கிறது...மீண்டும்...
கடவுளின் மீதான
நம்பிக்கை
பெருவாழ்வை
பரிசளிக்கும்
நம்பிக்கையிருந்தால்...
good....keep inspiring jee
ReplyDelete