காற்றில்
மிதப்பது போன்று
மென்மையாய் இருப்பதில்லை
வாழ்க்கை...
காதலியைப்
பிரித்துவிடும்
நண்பன்...
சகோதரனைக்
கொன்றுவிடும்
தாய்...
கடவுளைத்
தின்றுவிடும்
குழந்தைகள்...
தந்தையை
புணரும்
வேசி..
பூக்களில்
உறங்கும்
கனவுகள்...
காயங்களில்
ஒளிந்திருக்கும்
அச்சம்...
எது
நிமித்தமேனும்
உறைந்துவிடும்
மனிதர்கள்
இறுதிவரை
இளகுவதில்லை....
மாற்றியழிக்க
முடியாத வலிகள்
நினைவுகளாய் இப்பொழுது...
அலைகளில்
பயணிக்கும்
நினைவுகள்
என்றாவதொருநாள்
கரையொதுங்கும்
இறந்தஉயிருடன்...
No comments:
Post a Comment