துரத்தப்படும்
இடங்களில்
நிலைத்திருக்கும்
உன்னிருப்பு...
அருவியாய்
விழுந்து
கடலில் கலந்திடும் உன்னை,
அடையாளங்கள்
வடிவங்கள் மற்றும்
சக்திகளைவிட உயர்ந்த
உன்னைக் காற்று
என்ன செய்யக்கூடும்....
சங்கிலிகளில்
கட்டுண்டிருக்கும்
நாய்கள்
ஊளையிடும் துயரத்தில்...
மிளிரும் தோல்களில்
எலும்புகளிலும்
தசைகளிலும்
உதிரத் துளிகளிலும்
கண்டறியக்கூடும் உன்னை...
நிகழ்ந்துவிடாத
மனிதனாய்
இசைக்கப்படாத
பாடலாய்
தியானிக்கும்
நாட்களில்
புதிதாய் இருக்கிறது
பிறப்பு...
பிரதிபலிக்கும்
புனிதமற்ற மனித
பிம்பங்கள்
அச்சுறுத்தும்...
நீயல்லாத
மூன்றாம் மனிதனாகும்
வழியில் உன்
இறப்பின் தொடக்கம் நான்...
No comments:
Post a Comment