Friday, September 29, 2017

தர்ஷி

உனக்கான
வார்த்தைகளை
உதிர்த்தது
திருவிழாவில்
தொலைந்தலைந்த
பறவையொன்று…..
மிகவும்
கவனமாக
பொறுக்கிவைத்தேன்
உனக்காக
எப்பொழுதும்….
வார்த்தைகளை
உனக்காக
சேகரித்த
நாளொன்றில்
எனக்கான
வார்தைகளை
இழந்துநின்றேன்….
மனிதர்களை
நிந்திப்பதும்
வார்த்தைகளை
நேசிப்பதும்
எத்தகைய
வரம்?

No comments:

Post a Comment