எளிதாக
முடிவுசெய்து
இணைத்துவிடலாம்
நம்மை
ஒரு மதத்தில்…
ஒரு இனத்தில்…
அல்லது ஏதேனும்
ஒரு பிரிவில்…
எனினும்
அதுவல்ல நோக்கம்…
காலம் முழுவதும்
வழங்கப்படும்
வாய்ப்புகளில்
ஏதேனுமொன்றில்
நமது
மூதாதையர்களின்
துயரங்களையோ
துன்பங்களையோ
உணர்ந்தெழுந்தால்
நீயும் நானும்
சகோதரர்களே!
அப்படித்தான்
வழங்கப்படுகிறது
நம்மிடையே,
ஒவ்வொருமுறையும்
நமக்கான
அடுத்த வாய்ப்பு…
நாம்
எப்பொழுது
மனிதனாவோம்
எனும் கேள்விக்கு
பதில் சொல்ல
எப்பொழுது முடியும்
நம்மால்!
இணைத்துவிடலாம்
நம்மை
ஒரு மதத்தில்…
ஒரு இனத்தில்…
அல்லது ஏதேனும்
ஒரு பிரிவில்…
எனினும்
அதுவல்ல நோக்கம்…
காலம் முழுவதும்
வழங்கப்படும்
வாய்ப்புகளில்
ஏதேனுமொன்றில்
நமது
மூதாதையர்களின்
துயரங்களையோ
துன்பங்களையோ
உணர்ந்தெழுந்தால்
நீயும் நானும்
சகோதரர்களே!
அப்படித்தான்
வழங்கப்படுகிறது
நம்மிடையே,
ஒவ்வொருமுறையும்
நமக்கான
அடுத்த வாய்ப்பு…
நாம்
எப்பொழுது
மனிதனாவோம்
எனும் கேள்விக்கு
பதில் சொல்ல
எப்பொழுது முடியும்
நம்மால்!