Sunday, November 24, 2019

மஹிமா

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
பாலினம்…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
உண்மை…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
நேர்மை…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
துயரம்…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
சாதி,மதம்…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
வாழ்க்கை…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிந்துவிடுகிறோம்
சில கவிஞர்களை…!

No comments:

Post a Comment